’ஒரு மாதம் தான் டைம்’..!! அதுக்குள்ள மாத்திருங்க..!! அனைத்து கடைகளுக்கும் பாமக பகிரங்க எச்சரிக்கை..!!

ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


பாமக தலைவர் ராமதாஸ் புதிய பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளார். அது என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளின் பெயர்களும், பெயர் பலகைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் எனவும்,  தமிழும் ஆங்கிலமும் கலந்து இருக்கலாம் ஆனால் தமிழ் இல்லாமல் ஒரு பெயர் பலகை கூட இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் ‘தமிழை தேடி’ இயக்கம் சார்பில் ‘தனித்தமிழ் சொற்கள் அறிவோம்’ என்ற பதாகையை திறந்து வைத்தபின் பாமக தலைவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் ”தமிழ்நாட்டில் அனைத்து கடைகளிலும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் கருப்பு மை, ஏணி நாங்கள் கொண்டு வருவோம் ” என எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற கிளை தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா..!! மத்திய அரசு அவசர ஆலோசனை..!! வெளியாகும் கட்டுப்பாடுகள்..?

Mon Mar 27 , 2023
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று […]
202205030842581931 Tamil News Tamil News Covid 19 cases rise in Delhi SECVPF

You May Like