ஒரு குழந்தையானது, சிறு வயதிலிருந்து பல்வேறு காய்கறிகளை சாப்பிட்டு வளர்ந்தால், அந்த குழந்தையின் மூளைத்திறன் நன்றாக இருக்கும் என்றும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே தான், குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்து கிடைக்கும் பொருட்களை வாங்கி, அதனை சாப்பிட வைத்து, அவர்களை வளர்கிறார்கள் பெற்றோர்கள். அந்த வகையில், இன்று எந்தெந்த காய்கறிகளை கொடுத்து வளர்த்தால், ஒரு குழந்தை புத்திசாலியாக வளரும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு புதினா இலைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளை புத்துணர்ச்சியோடு காணப்படும். அதோடு சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளை சரியான சமயத்தில், உறங்க வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை என்று சொல்லப்படுகிறது. நன்றாக உறங்கினால் மட்டும்தான், மூளை இரவில் நன்றாக ஓய்வெடுத்து, பின்பு காலை, குழந்தை புத்துணர்வோடு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.