தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று…..! அமைச்சர் வெளியிட்ட தகவலால் அச்சத்தில் மக்கள்….!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் உருமாற்ற நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் சென்ற மாதம் வரையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சுமார் 2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்தபோது சராசரியாக 2️ முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. தற்சமயம் நாள்தோறும் 8 முதல் 10 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில், தற்சமயம் தினசரி நோய் தொற்று பாதிப்பு 100 ஐ தாண்டி உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் ஒரே பகுதியில் பலரையும் பாதிக்கும் கிளஸ்டர் வகையில் நோய் தொற்று பரவல் இல்லை என்பது ஆறுதலான விஷயம். இது மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாக உள்ளதால் மக்கள் பயப்பட வேண்டாம். இருந்தாலும் நோய் தொற்று விதிமுறைகளை நிச்சயமாக எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல சென்னை பள்ளிக்கரணையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, ஒரு வாரத்திற்கு ஒரு மாத்திரை சாப்பிட வேண்டிய நிலையில் ஒரே நாளில் 60 முதல் 70 மாத்திரைகள் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை சமீபத்தில் நாம் கண்டோம்.

அதேபோல உடல் கட்டமைப்பை காட்ட வேண்டும் என்று தவறான மருந்தை எடுத்துக் கொள்வது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவையும் விபரீதமான முடிவுகளை உண்டாக்கும். ஆகவே மருந்து மாத்திரையோ அல்லது உடற்பயிற்சியும் எதுவாக இருந்தாலும், பரிந்துரையின் பேரில் அளவுடன் இருப்பது அவசியம் என்று கூறினார்.

Next Post

திரைப்படங்களை மிஞ்சும் கொள்ளை..!! சுரங்கம் தோண்டி சுரண்டி எடுத்த நகைகள்..!! அதிர்ச்சியில் போலீஸ்..!!

Fri Mar 31 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நகைக்கடையில் புகுந்து கொள்ளையடிக்க சுமார் 10 அடி நீளத்திற்கு கொள்ளையர்கள் சுரங்கம் தோண்டியுள்ளது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பியுஷ் கார்க் என்பவர் நடத்தி வந்த நகைக்கடையில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தனது கடையை திறக்க பியுஷ் கார்க் சென்றுள்ளார். ஆனால், கடையை திறந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி […]

You May Like