அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவியும் அமெரிக்கா முதல் பெண்மணியுமான ஜில் பைடனுக்கு கோவிட் -19 பரிதோனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது, அவர் லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் -19 பரிசோதனையில் நெகடிவ் வந்துள்ளது.
அமரிக்கா அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு தற்போது 72 வயது, அவருக்கு கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவிட் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜில் பைடன் நேற்றைய தினம் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார், என்று அவரது தகவல் தொடர்பு இயக்குனர் எலிசபெத் அலெக்சாண்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “ஜில் பைடனுக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் -19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்ததாக” வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதி இந்த வாரம் வழக்கமான கேடன்ஸில் பரிசோதனை செய்து அறிகுறிகளைக் கண்காணிப்பார்.” என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின், டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்து கொள்ள இருக்கிறார். தற்போது அதிபர் மனைவிக்கு மட்டும் தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிபரின் பரிசோதனையில் பிரச்சனை இல்லை என்பதால் அவர் நிச்சயம் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்று உறுதிப்படுத்தாத தகவல் கிடைத்துள்ளது.