திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..! இடைத்தேர்தல் எப்போது..?

vijay tvk 1

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..


பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார்.

எனவே அவரே மீண்டும் களம் காண்பாரா அல்லது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. அதே நேரம் தவெக தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது..

RUPA

Next Post

வாரத்திற்கு 2 நாட்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம்..! சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த டெல்லி அரசு..!

Thu May 14 , 2026
பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகளுக்கான வேண்டுகோளுக்கு இணங்கவும், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழலுக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைக்கும் வகையிலும், டெல்லி அரசு வியாழக்கிழமையன்று தனது ஊழியர்களுக்குக் கட்டாயமாக இரண்டு நாட்கள் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ (Work from Home) முறையை அறிவித்தது; இது தவிர, மேலும் பல நடவடிக்கைகளையும் அது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்ட முதலமைச்சர் ரேகா குப்தா, […]
delhi government

You May Like