” குண்டு வீசாதீங்க..” இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்.. காதில் போட்டுக் கொள்ளாத நெதன்யாகு.. என்ன தான் நடக்குது?

rmqbaqac trump 160x120 24 June 25 1

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து தனது மற்றொரு பதிவில், “இஸ்ரேல் ஈரானை தாக்கப் போவதில்லை. அனைத்து விமானங்களும் திரும்பி வீட்டிற்குச் செல்லும், அதே நேரத்தில் ஈரானுக்கு நட்புரீதியான விமானங்கள் பறக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, போர்நிறுத்தம் அமலில் உள்ளது! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல் – ஈரான் போர்

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது.

இந்த சூழலில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.. மோதல் நீடித்து வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப்மத்தியஸ்தம் செய்து இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே ஈரான் அப்பட்டமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பலமாக பதிலடி கொடுப்பதாக அறிவித்தது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் “ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பலமாக பதிலளிக்க இஸ்ரேலிய இராணுவத்தை நான் அறிவுறுத்தினேன்” என்று கூறினார்.

ஈரான் எந்த புதிய ஏவுகணை தாக்குதலையும் நடத்தவில்லை என்று மறுத்த போதிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தம் தொடங்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலை நோக்கி எந்த ஏவுகணைகளும் ஏவப்படவில்லை என்று இராணுவ அதிகாரிகள் கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உள்ளூர் நேரப்படி மாலை 7 மணி வரை “சோதனை போர் நிறுத்தம்” கடைபிடிக்கப்பட்டதாகவும், ஈரானின் பதிலை அளவிட இஸ்ரேல் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்திருந்தால், இஸ்ரேல் நீண்ட போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

RUPA

Next Post

“சமுக அநீதி அரசு.. நாசமான 4 ஆண்டுகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளது..” கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா..

Tue Jun 24 , 2025
பட்டியலின மக்களின் சமூக உரிமை போன்ற விவகாரங்களில் திமுக அரசு கபட நாடகம் ஆடுவதாக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திமுக அரசை சமூகநீதி அரசு என ‘மூச்சுக்கு மூச்சு’ விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, உண்மையில், ‘சமுக அநீதி’ அரசாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக, பட்டியலின […]
a1775

You May Like