தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை அருகே அச்சங்குளம் பகுதியில் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ராணி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.
கணவர் ஞானசேகரன் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், அன்றாடம் இரவு நேரத்தில் தூத்துக்குடிக்கு மினிவேனில் மீன் வாங்கிக்கொண்டு மறுநாள் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரம் செய்வார். இப்படி இரவு நேரங்களில் கணவர் வீட்டுக்கு வராமல் இருப்பதை ராணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று கருப்புசாமி என்ற நபருடன் கள்ளக்காதலில் விழுந்துள்ளார்.
இருவரும் ராணி வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ராணியின் மகளை கருப்புசாமி காதலிப்பதாக ஒரு கட்டத்தில் தெரிவிக்க இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி முதலில் மறுத்துள்ளார். ஆனால், கருப்பசாமி அவரை சமாதானம் செய்து ராணியை திருமணம் செய்து கொண்டால் நான் இங்கு வந்து செல்வதில் பிரச்சனை இருக்காது. எப்போது வேண்டுமானால் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை காட்டி உள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ராணியும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்து திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் எல்லாம் ஒரு கட்டத்தில் கணவர் ஞானசேகருக்கு தெரிய வர அவர் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து தனது மகளிடம் சென்று, “உன் தந்தை இருக்கும் வரை நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே அவரை கொன்றுவிடலாம்.” என்று கூறியுள்ளார். இதனால், மகளும் அதற்கு சம்மதித்து தாயுடன் சேர்ந்து தந்தையை தீர்த்து கட்டியுள்ளார்.