குடியரசு தின அணி வகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறும்…! மத்திய அரசு தகவல்…!

குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன.

2023 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.


அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு – காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் – டையூ, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்கார ஊர்திகள், நாட்டின் புவியியல் மற்றும் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படும்.

கலாச்சார அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள், உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்திய பொதுப்பணித் துறை, பழங்குடியினர் நல அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‌

Vignesh

Next Post

பார்சல் சேவை..!! ஜனவரி 26 வரை நாடு முழுவதும் நிறுத்தம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

Mon Jan 23 , 2023
குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பார்சல் சேவைவை தற்காலிகமாக நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து […]
பார்சல் சேவை..!! ஜனவரி 26 வரை நாடு முழுவதும் நிறுத்தம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

You May Like