விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4,000-லிருந்து ரூ.6,377ஆக அதிகரிப்பு…!

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.3,750 ரூ.6,760 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் 2,560 ரூபாயிலிருந்து 4,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இதுவாகும்.

Vignesh

Next Post

அடேங்கப்பா!... தலைவலியில் இத்தனை வகைகளா?... உங்களுடையது எந்த வகை? - காரணங்களும், தீர்வுகளும்!

Thu Jun 8 , 2023
தலைவலியானது பல வகைகளாக இருந்தாலும், இதற்கான காரணங்களும் பல வகைகள்தான். மன அழுத்தம், உணர்ச்சி அதிகரித்தல், நீரிழப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால் தலைவலி வருகிறது. தலைவலியின் அளவும் மிதமான, தீவிர, அதி தீவிர, பொறுத்துக்கொள்ளமுடியாத என பல அளவுகளில் வரும். இது சிலருக்கு எப்போதாவது வரலாம். சிலருக்கு அடிக்கடி, ஏன் தினசரி கூட வரலாம். பலருக்கும் தலைவலியானது மிகுந்த அசௌகர்யத்தை கொடுக்கும். பொதுவாக தலைவலியானது […]
Headaches

You May Like