உஷார்.. லட்சக்கணக்கில் பணத்தை இழக்கலாம்… ஆன்லைனில் நூதன மோசடி.. காவல்துறை எச்சரிக்கை…

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

fraud alert zee

இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சமீபகாலத்தில் 2 புதுவகை சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. ஒன்று, யூடியூப் வீடியோக்களை லைக் செய்யும்படி கூறி, பின்னர் பகுதி நேர வேலை வாய்ப்பு அல்லது முதலீடு என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் குற்றம். அதாவது வாட்ஸ்அப், லிங்க்ட்இன் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தி மக்களை இந்த மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுகின்றனர்.. யூடியூப் வீடியோக்களை லைக் செய்தால், ஒரு நாளைக்கு 5,000 பணம் பெறலாம் என்ற ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்..

முதலில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி உங்களுக்கு முதலில் மெசேஜ் அனுப்புகின்றனர்.. என்ன வேலை என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில், வீடியோவுக்கு லைக் போட்டால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர்.. ஒரு வீடியோவுக்கு லைக் போட்டால் ரூ.50 கிடைக்கும் என்று அந்த மோசடி கும்பல் கூறுகின்றனர்..

மேலும் அதற்காக நீங்கள் 3 வீடியோ லிங்க்களை அனுப்பி, அவற்றுக்கு லைக் செய்து, அதற்கான ஸ்கீரின் ஷாட்டை பகிர வேண்டும் என்று கூறுவார்கள்… பின்னர் உங்களுக்குப் பணம் செலுத்துவதில் சில சிக்கல் உள்ளது என்று கூறி, எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்ய சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும்படி உங்களிடம் கேட்பார்கள். இந்த செயலிகளில் உள்ள மால்வேர் மூலம் அவர்கள் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.. கட்டண நுழைவாயில் சரிபார்ப்புக்கு ரூ.1 செலுத்த வேண்டும் என்று கேட்பார்கள்..

maxresdefault

நீங்கள் ரூ.1 செலுத்திய உடன், மோசடி கும்பல் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை பெறுவதுடன் OTP/மின்னஞ்சலுக்கான அணுகலையும் பெறுகின்றனர்.. இதன் மூலம் அவர்கள் பணத்தை எளிதாக திருடுகின்றனர்.. எனவே இதுபோன்ற வேலைவாய்ப்பு மெசேஜை யாரும் நம்பவேண்டாம்..

மற்றொரு குற்றம்… வங்கி அனுப்புவது போல் மோசடி மெசேஜ் அனுப்பி பொதுமக்களின் பெயரில் லோன் எடுத்து மோசடி செய்யும் குற்றம். சில தனியார் வங்கிகளின் லோகோவை, வாட்ஸ் அப்-ல் டிபியாக வைத்து கொண்டு அந்த எண்ணில் இருந்து பொதுமக்களுக்கு வங்கி அனுப்புவது போல் மெசேஜ் அனுப்புவர்.. வங்கிக் கணக்கோடு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை எனில் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று குறிப்பிட்டு, லிங்க ஒன்றும் இருக்கும்.. அந்த லிங்கை கிளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட வங்கியில் முகப்பு பக்கத்தைப் போன்றே காட்சியளிக்கும். அதில் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு பொதுமக்கள் லாகின் செய்தால், அவர்களின் தரவுகள் சைபர் கிரிமினல்களுக்கு சென்று விடும்.

பொதுமக்களின் வங்கி தொடர்பான தரவுகளை வைத்துக்கொண்டு, அவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவதுடன், வங்கிகளின் வெப்சைட் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ள இன்ஸ்டன்ட் லோன் வசதியைப் பயன்படுத்தி பொதுமக்களின் பெயரில் லோன் எடுக்கின்றனர்.. மேலும் அந்த லோன் மூலம் கிரெடிட் ஆகும் பணத்தை கிரிமினல்கள் தங்கள் வங்கிக்கணக்கிற்கு உடனடியாக மாற்றி விடுகின்றனர். எனவே பான் கார்டு. ஆதார் கார்டுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

முறைகேடு வழக்கு...! சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு...! டெல்லி அரசியலில் தொடரும் பரபரப்பு...!

Sun Mar 5 , 2023
மணீஷ் சிசோடியா சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் […]
UYfeaEAAhqkI

You May Like