மே.வங்க மாநிலத்தில் பதற்றம்…! 697 வாக்குச்சாவடி மையத்தில் இன்று மறுவாக்குப்பதிவு…!

மேற்கு வங்க மாநிலத்தில் 697 வாக்குச்சாவடி மையத்தில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 73,887 இடங்கள் மற்றும் 5.67 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.


பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதால் தேர்தல் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலத்தில் 697 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மாநிலத்தில் பதினாறு பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு...! கிலோ ரூ.140-க்கு விற்பனை...!

Mon Jul 10 , 2023
சென்னை கோயம்பேடு தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் 82 ரேஷன் கடைகளிலும் தக்காளி […]
tomatoes prices in India 619cda46aaabf

You May Like