அந்தரங்க உறுப்பை வெட்டி வாயில் திணித்துக் கொலை.! நாட்டையே அதிரவைக்கும் சம்பவம்.!

மும்பை பகுதியில் உள்ள பிவாண்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அவரது அந்தரங்க உறுப்பை அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் ஷமிம் அன்சாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அஸ்லாம் அன்சாரி என்றும் போலீசார் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் தினமும் சந்தித்து பலவற்றை பேசிக்கொண்டு, பகிர்ந்து கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினர் கூறியதாவது, ஷமிமுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பெண் தோழிகள் இருந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த தோழிகளில் ஒருவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஷமிம் தனது காதலியை அஸ்ஸாம்க்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் இறந்தவரின் ஹோட்டல் பார்ட்டியில் அந்த தோழி பற்றி பேசும் போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால், இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டுள்ளனர். சண்டையில் அஸ்லாம், ஷமிமை ஒன்பது முறை கத்தியால் குத்தி, அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார். அதன் பின்னர், வெட்டப்பட்ட உறுப்புகளை இறந்தவரின் வாயில் திணித்து விட்டு தப்பியோடி விட்டார் என போலீசார் கூறுகின்றனர்.

Baskar

Next Post

விடுப்பு எடுத்தால் சம்பளம் கட்!! பள்ளிக்கல்வித்துறை முடிவு!!

Thu Nov 10 , 2022
பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக புகார்கள் வந்தனது. இதனால், பளளிக்கல்வித்துறை இது குறித்து ஆலோசனை நடத்தியது. பகுதி நேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் […]

You May Like