எடை குறைப்பு, மஞ்சள் காமாலை, தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகள், கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை உள்ள எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் அனைத்துவிதமான காய்கறிகளும் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளன. அதல் ஒருவகையான பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், நல்ல கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன. முழுத்தாவரமும் மருந்து இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பிக்கிடக்கின்றன.
தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது பீர்க்கங்காய் ஆகும். இதன் இலைகளும் மருத்துவ குணம் உடையவை. இலைகளை கண்ணில் ஏற்படும் வலிகள் மற்றும் வீக்கத்திற்கு அதன் சாற்றை போடுவதில் மூலம் விரைவில் குணம் அடையும்.
சிறுநீரக கோளாறுகளுக்கு நன்கு முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்தப் படுகிறது.பீர்க்கங்காயில் இருக்கும் வைட்டமின்கள் தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.
பீர்க்கங்காயை உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதி படுவோருக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரத்த சோகையில் இருந்து விடுபட பீர்க்கங்காய் சாப்பிடலாம்.பீர்க்கங்காயின் பழங்கள் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம். சுவாச கோளாறுகளுக்கும் அரு மருந்து. மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும். உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.
இதன் விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. இதை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு பயன்படும்.
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம்.
பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை. மேலும் பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கவும் கூடியது. பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.