இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..? – வானிலை ஆய்வு மையம் அப்டேட்..

heavy rain

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (26-09-2025) காலை, 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்.28 முதல் அக்.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தொடங்கி செப்.30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Read more: பரபரப்பை கிளப்பிய கிட்னி திருட்டு வழக்கு… தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு…!

English Summary

Which districts are likely to receive rain today and tomorrow? – Meteorological Department Update..

Next Post

50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் - புதன் சேர்க்கை : இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ஜாக்பாட்.. குபேரனின் அருளால் செல்வம் பெருகும்!

Fri Sep 26 , 2025
ஜோதிடத்தில், செவ்வாய் மற்றும் புதனின் இணைவு ‘யுக்த யோகம்’ அல்லது சில நேரங்களில் ‘மகாபாக்ய யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இப்போது, ​​சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு முக்கியமான கிரகங்களும் விஜயதசமி போன்ற மிகவும் புனிதமான நாளில் துலாம் ராசியில் இணைகின்றன. இந்த அரிய மற்றும் சக்திவாய்ந்த இணைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும், அவர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் வெற்றிகளையும் தரும். […]
zodiac signs raja yogam

You May Like