தமிழ்நாட்டில் குடும்பத்தலைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை மிக விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணி புரியும் பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடும் பெண்கள், சிறிய அளவிலான கடைகளில் பணியாற்றும் பெண்கள், போன்றோர் இந்த உரிமை தொகையை பெற தகுதியானவர்கள் என்று சொல்லப்படுகிறது.