லஞ்சம் வாங்குவதில் காட்டும் அக்கறையை, சம்பளம் வாங்குவதிலும் காட்டுங்க… அதிகாரிகளுக்கு அட்வைஸ்….

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் சிலோன் காலணியில் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்துக்காக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி தாசில்தார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபாண்டி மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் தாசில்தார் மக்களின் அசௌகரியங்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்தது லஞ்சம் வாங்குவதில் காட்டும் அக்கறையை, சம்பளம் வாங்குவதிலும் அதிகாரிகள் காட்ட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

RUPA

Next Post

கோகுல்ராஜ் கொலை வழக்கு..!! யுவராஜுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை..!! தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்..!!

Fri Jun 2 , 2023
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் […]
202203080903045251 Gokul Raj murder case sentence announced today SECVPF

You May Like