நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார்.
நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, ராஜா வீட்டில் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு அரிவாளுடன் நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைய சென்றார். கொலை குறித்து இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.