#நாமக்கல்: குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவன்..!

நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார்.


நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, ராஜா வீட்டில் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு அரிவாளுடன் நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைய சென்றார். கொலை குறித்து இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

1newsnationuser5

Next Post

3 மாத குழந்தையை மாடியில் தூக்கி எறிந்து கொன்ற தாயின் கோர சம்பவம்..! 

Tue Jan 3 , 2023
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லெட்டில் வசிப்பவர் ஆசிப். இவரது மனைவி பெர்சனாபானு மாலிக் (23). இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தது. அதன்பிறகு பெர்சனாபானு தனது குழந்தை அம்ரீன்பானுடன் வீட்டுக்கு சென்றார். டிசம்பர் 14ஆம் தேதி அம்ரீன் பானுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் குழந்தை நடீரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. […]
baby tail 2

You May Like