#திருப்பத்தூர்: கணவன் மாலையை கழற்றியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ரமேஷ் (36). ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் தனது மனைவி கவிதா மற்றும் 2 பிள்ளைகளுடன் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு மாலையிட்டு பாத யாத்திரை சென்று வந்திருக்கிறார். 


இதனை தொடர்ந்து ,இந்த ஆண்டும் சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலைக்கு மாலை போட்டுள்ளார். இந்த நிலையில் சில காரணங்களால் அவர் மாலையை கழற்றியுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மனைவி, தன்னிடம் கூறாமல் மாலையை கழற்றியது ஏன்? என கணவர் ரமேஷிடம் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கணவன் – மனைவி இருவரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறின் காரணமாக மனமுடைந்த கவிதா, அறைக்குள் சென்று தூக்கிட்டு கொண்டுள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் மனைவி மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#திருநெல்வேலி : காதலிப்பதாக கூறி பெண்ணை கடத்தி சென்ற இளைஞர்..!

Wed Nov 23 , 2022
தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது.  திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்து அதே பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியிடம் தான் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த […]
man being arrested handcuffed law enforcement detention crime concept man being arrested handcuffed 147898121

You May Like