மனைவி திருமண விழாவில் நடனம் ஆடியதால் கொதித்து எழுந்த கணவர்….! இறுதியில் நேர்ந்த பயங்கரம்….!

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பாங்கவுரா கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அதே கிராமத்தைச் சேர்ந்த டின்ஹாபேகா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் டின்ஹாவின் மனைவி மற்ற குடும்பத்தினருடன் சேர்ந்து நடனம் ஆகிக்கொண்டிருந்தார்.


இதனால் ஆத்திரம் கொண்ட அவர், திருமண விழாவில் எப்படி நடனம் ஆடலாம்? என்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, டின்ஹாவை அவரது சகோதரர்கள் இருவரும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், சகோதரர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவி மைத்துனர் உள்ளிட்ட அனைவரையும் கத்தியால் குத்தியதால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு உண்டானது.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு கத்தி குத்தால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் டின்காவின் சகோதரர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மனைவி ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டின்ஹா பேஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Post

கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு…..! விரக்தியில் மனைவி எடுத்த முடிவால் அனாதையான 1½ வயது குழந்தை…..!

Wed May 17 , 2023
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28) இவர் படப்பை பகுதியில் உள்ள ஒரு மொபைல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவருடைய உறவுக்கார பெண்ணான பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் படப்பை பகுதியின் பணிபுரிந்து வரும் பிரசாத்துக்கும், […]
Thiruvallur crime

You May Like