கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமா…..? தாலி கட்டும் நேரத்தில் ட்விஸ்ட் திருமணத்தை தடுத்து நிறுத்திய மனைவி….!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ராம்குமார்(30) திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர்களிடம் 2019 ஆம் வருடம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.


இதற்கு நடுவே சபிதாவுக்கு தெரியாமல் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவாகரத்து பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து திருவெண்காடு ஆலயத்தில் ராம்குமார் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர் ஒருவரை உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த சபிதா தன்னுடைய குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பெண் காவலருடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ராம்குமார் திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். சம்பந்தப்பட்ட இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்க வேண்டும் என்று தெரிவித்து திருவெண்காடு காவல்துறையினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தன்னுடைய கணவர் ஆசிரியராக விவாகரத்து பெற்று வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்ததாக சபிதா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கியிருக்கிறார்.

Next Post

விசாரணை கைதிகளின் பற்களை உடைத்த ஏஎஸ்பி சஸ்பெண்ட்.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..

Wed Mar 29 , 2023
நெல்லை அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த புகார் பற்றி இன்ற் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார்.. அப்போது “அதிமுக நிர்வாகி இளங்கோ, நேற்று முன் தினம் 5 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.. அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் […]
mk stalin 5 7 0

You May Like