கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ராம்குமார்(30) திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர்களிடம் 2019 ஆம் வருடம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
இதற்கு நடுவே சபிதாவுக்கு தெரியாமல் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவாகரத்து பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து திருவெண்காடு ஆலயத்தில் ராம்குமார் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர் ஒருவரை உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த சபிதா தன்னுடைய குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
பெண் காவலருடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ராம்குமார் திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். சம்பந்தப்பட்ட இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்க வேண்டும் என்று தெரிவித்து திருவெண்காடு காவல்துறையினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தன்னுடைய கணவர் ஆசிரியராக விவாகரத்து பெற்று வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்ததாக சபிதா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கியிருக்கிறார்.