“என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க.”! திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு.! இளம் பெண்ணை கைது செய்த போலீஸ்.!

பீகார் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது அவரது காதலி ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரிதா குமாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான தர்மேந்திர குமார் என்பவரை கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் வற்புறுத்தி இருக்கிறார் சரிதா.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவரது காதலன் தனக்கு வீட்டில் வேறு பெண் பார்த்து விட்டதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரிதா குமாரி தனது நண்பருடன் இணைந்து தர்மேந்திர குமாரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தர்மேந்திர குமாரை பேச அழைத்து சரிதா குமாரி அவரது நண்பருடன் சேர்ந்து தனது காதலனின் முகத்தில் ஆசிட் வீசி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த தர்மேந்திர குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சரிதா குமாரியை கைது செய்திருக்கும் காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Next Post

30க்கும் அதிகமான மாணவிகளின் ஆபாச படங்கள்.! வகுப்பறையில் பாலியல் சீண்டல்.! போக்சோ சட்டத்தில் தமிழாசிரியர் கைது .!

Thu Dec 14 , 2023
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளை கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு பள்ளியில் 30க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். […]

You May Like