படுத்த படுக்கையான கணவர்… பாய் பிரண்டுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி..!! பகீர் பின்னணி

affair murder

நாக்பூர் மாவட்டம் தருடி குர்த் பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரக் கொலை, முழு மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 38 வயதான சந்திரசேன், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்தார். அவரால் நடக்க கூட முடியாத நிலையில் பாத்ரூம் அழைத்து செல்வது முதல் முழு நேரமும் கவனித்து கொள்வது வரை மனைவி திஷா தனியாக செய்து வந்தார். அந்த சமயத்தில் ஆசிஃப் என்ற இளைஞனுடன் திஷாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.


இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென ஒரு நாள் சந்திரசேகன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக திஷா கூறிய நிலையில், உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பிரேத பரிசோதனையில் சந்திரசேகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து, திஷா மற்றும் ஆசிப் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். திஷா மற்றும் சந்திர சேகரனுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: அஜித்குமார் கொலை.. தடையை மீறி போராட்டம் நடத்துவேன்.. சீமான் அதிரடி..

English Summary

Woman Holds Down Bedridden Husband’s Hands, Lover Smothers Him to Death in Maharashtra

Next Post

ஆண்டுதோறும் 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் நுரையீரல் புற்றுநோயால் பலியாகின்றனர்!. காற்று மாசுபாடும் காரணம்!. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள்!.

Tue Jul 8 , 2025
ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஒரு முக்கிய மற்றும் மிகவும் ஆபத்தான காரணமாகும். அதன் புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது புகைப்பிடிப்பவர்களின் நோய் மட்டுமல்ல, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் பிற காரணிகளால் புகைபிடிக்காதவர்களும் இதற்கு பலியாகின்றனர். உலகளவில் நுரையீரல் புற்றுநோய்தான் மரணத்திற்கு முக்கிய காரணம். புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 […]
lung cancer 11zon

You May Like