பணி செய்யும் நபர்கள் சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ

college 2025 1

பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு ஐ.ஐ.டி. சென்னை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் மேலாண்மைதுறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணிபுரிவோர் இப்படிப்பில் சேரும் வகையில் மாற்று வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறும். 2 ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 2025 அக்டோபர் 19-ம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுடையவர்கள் https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த சிறப்பு எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2025 நவம்பர் 8 மற்றும் 9 ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து சிறப்பு எம்.பி.ஏ. படிப்பு 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று கடைசி நாள்...! உடனே பதிவு செய்ய வேண்டும்...!

Tue Sep 30 , 2025
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]
money Pension 2025

You May Like