தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்..!! யாரும் வெளிய போகாதீங்க..!! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Chella

Next Post

அட ராமராஜன் மகளா இவங்க..!! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!

Tue Apr 23 , 2024
80களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். 1977-ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 1987ல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் […]

You May Like