வீடுகளில் மூலிகை செடிகளை வளர்த்து பணம் சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!!

வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ரூ.1500-க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும் பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை உள்ளிட்ட 10 வகையான மூலிகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுதவிர, செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தேங்காய் நார் கட்டிகள், மண்புழு உரம், தொழில்நுட்ப கையேடு, போக்குவரத்து மற்றும் ஆவணப்படுத்துதல் என மொத்தம் ரூ. 1500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், அரசு மானியமாக ரூ. 750 வழங்கும். விண்ணப்பதாரர் தனது பங்களிப்புத் தொகையாக ரூ. 750 செலுத்த வேண்டும்.


இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் / Application Form பக்கத்தில் தேவைப்படும் விவரங்கள் அளித்து, வீட்டு முகவரி சான்று/ஆதார் அட்டை (அல்லது ஏதாவது ஒரு அடையாள ஆவணம்) மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

CHELLA

Next Post

2 பேருமே செம போதை..!! திடீரென வெடித்த சண்டை..!! 2-வது மனைவியை போட்டுத் தள்ளிய எஸ்எஸ்ஐ..!! பகீர்

Sun Mar 5 , 2023
தேனி மாவட்டம் கம்பம் நகர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். இவர் தனது 2ஆவது மனைவி அமுதாவுடன் கம்பம்மெட்டு காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் அமுதா உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அமுதாவின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அமுதாவின் கணவரான எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை […]
2 பேருமே செம போதை..!! திடீரென வெடித்த சண்டை..!! 2-வது மனைவியை போட்டுத் தள்ளிய எஸ்எஸ்ஐ..!! பகீர்

You May Like