தூள்..! இனி ஈசியா தமிழக அரசு வழங்கும் சேவைகளை பெறலாம்..! “எளிமை ஆளுமை” திட்டம் தொடக்கம்…!

Mk Stalin Tn Govt 2025

தமிழகம் முழுவதும் “எளிமை ஆளுமை” திட்டத்தினை மக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக ’எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக இணையவழி சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சேவைகளில் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, அதிலுள்ள முக்கிய விதிமுறைகளை சீர்செய்து,’எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் அனைவரும் சேவைகளை உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை துரிதப்படுத்த இரு குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் குழு (Screening Committee) மூத்த அதிகாரிகளை கொண்டு படிப்படியாக வருகின்ற முன்மொழிவுகளை ஆராய்ந்து ஆலோசித்து, பின்பு இரண்டாவது குழு (Empowered Committee) சட்டத்தை பின்பற்றி எவ்வாறு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வாறு உத்தரவுகளையிட தலைமைச் செயலாளரின் தலைமையில் இயங்குகிறது. இவ்வாறு உத்தரவுகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட முடிவுகளை முதலமைச்சரின் ஆலோசனைகளை பெற்று அரசாணைகள் பிறப்பிக்கப்படுகிறது.

மின் ஆளுகையை ஊக்குவித்து, இணையவழி மூலம் அரசு சேவைகளை பெறுவதற்கான வழிகளை உயர்த்தி, வெளிப்படை தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது. ”எங்கும் எப்போதும் அரசு சேவைகளை பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்” என 21.06.2021 ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்கள் இணையவழியிலே அரசு சேவைகளை விரைவாகவும் எளிமையுடனும் பெற்றிடுவதற்காக தொடங்கப்பட்ட எளிமையான நிர்வாகம் (Simple Gov) எனும் திட்டத்தின் கீழ் எட்டு அரசுத் துறையின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணையவழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், வணிக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவிட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெள்ளை வகை தொழிற்சாலைகளின் பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. எளிமை ஆளுமையின் மூலமாக, தற்போது நடைமுறையிலுள்ள நேரடி ஆய்வுகள், ஆவண சரிபார்ப்பு போன்ற முறைகளுக்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி – KYC, டிஜிட்டல் கையொப்பம் இன்னும் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் எளிமையாக்கப்பட்ட சேவைகளை விரைவாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Read More: கன்னடம் மட்டுமல்ல தெலுங்கும் தமிழில் இருந்து தான் வந்தது.. ஆதாரத்துடன் சொன்ன அப்பாவு..!!

Vignesh

Next Post

வெற்றி பெற்ற ஐபிஎல் அணி உரிமையாளருக்கு கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா..?

Fri May 30 , 2025
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக மாதிரியும் கூட. ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்போது, ​​அந்த அணியின் வீரர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் மகிழ்ச்சியை விட, அணியின் உரிமையாளர்கள் மிகப்பெரிய நிதி வெற்றியைப் பெறுகிறார்கள். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அணியின் உரிமையாளருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதுதான் கேள்வி. ஐபிஎல் […]
IPL Cup 1

You May Like