விவசாயிகள் கவனத்திற்கு…! உழவன் செயலியில் இனி நீங்களே புக் செய்து கொள்ளலாம்…! முழு விவரம் இதோ….

இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள் வாங்க ‘உழவன் செயலியை பயன்படுத்தலாம்.

விவசாயிகள் நெல் அறுவடையில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலையை சரி செய்ய அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்படுவதால், தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது.


இந்த பிரச்னையை தீர்க்க வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்களை, நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக, உழவன் செயலியின் மூலம் ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ என்ற முகப்பை தேர்வு செய்து ‘அறுவடை இயந்திரங்கள் பற்றி அறிய’ என்ற துணை முகப்பின் மூலம் உங்கள் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ள முடியும்.

விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்புகொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை இயந்திரங்களை பெற்று பயனடையலாம்.

Vignesh

Next Post

கன்ஃபார்ம்.. உஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா கசிந்துள்ளது.. அடித்து சொல்லும் அமெரிக்கா..

Thu Mar 2 , 2023
சீனாவில் உள்ள உஹான் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்காவின் FBI உறுதிப்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி […]
delhi coronavirus testing ec4d0d8c 19c6 11eb bfd3 008a2bae3f6c 1677634995658 1677634995658

You May Like