வயதில் சிறியவர்களாக இருப்பவர்கள் தவறு செய்வது இயல்பான விஷயம்தான்.அதே நேரம் சிறுவர்களாக இருப்பதற்கு எது செய்தாலும் நின்று நிதானமாக யோசித்து செய்வது மிகவும் அவசியம்.
அப்படி வயதில் சிறியவர்கள் தவறு செய்தாலும், அதனை பெரியவர்களாக இருப்பவர்கள் மன்னித்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வது பெரியவர்களின் கடமையாகும்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. இதற்கு நடுவே அருண், கௌசல்யா தம்பதிக்கு சென்ற 6 மாதத்திற்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தான் சென்ற 3 ஆண்டுகளாக தாய், தந்தையைப் பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த பின்னரும் கூட தாய், தந்தை வந்து பார்க்கவில்லையே என்ற மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக, கௌசல்யா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
இந்த நிலையில், தன்னுடைய கணவர் அருண் வேலைக்கு சென்று விட்டதால் வீட்டில் தனிமையில் இருந்த கௌசல்யா தன்னுடைய சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கௌசல்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூலாம்பட்டி காவல்துறையினர் கௌசல்யாவின் சடலத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆகவே அருண் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு, கௌசல்யாவின் இறப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தாய், தந்தை வந்து பார்க்காத விரக்தியின் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட இளம் என்னால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.