மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் சக நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு இளைஞர் இச்சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ராகவேந்திரா வயது 25. இவர் தனது நண்பர்களான அஜய் பாலாஜி, நிஜாமுதீன் மற்றும் விவேக் ஆகியோருடன் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார். அப்போது அவர்களுக்குள் திடீரென சிறிய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜய் பாலாஜி விவேக் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் ராகவேந்திராவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரா அவர்களில் ஒருவரை தாக்கி விட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த நாள் வரும் சேர்ந்து கோபத்தில் ராகவேந்திராவை பலமாக தாக்கி தாங்கள் வைத்திருந்த அருவாளை கொண்டு வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். ரத்த வெள்ளத்தில் ஒரு இளைஞர் துடிதுடித்து கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தது. மேலும் கொலை செய்த நான்கு நபர்களையும் தேடி வந்தது. இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அஜய் பாலாஜி நஜ்முதீன் மற்றும் விவேக் ஆகியோரை கைது செய்தது போலீஸ். மேலும் இவர்களின் மீது பல வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நாலு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை இந்தக் கொலைக்கும் வேறு ஏதேனும் சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகிறது.