திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த பிரேமா (30) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து பிரேமா தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(25) என்ற இளைஞருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இளைஞர் விஜய்க்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்து கொண்ட அவருடைய கள்ளக்காதலி பிரேமா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் மேலும் என்னை நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவை என்னிடம் இருக்கிறது அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட விஜய் பிரேமா வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டார் மேலும் அவருடைய செல்போனை பறித்துக்கொண்டு தர மறுத்துள்ளார். அதோடு பிரேமாவை மிகவும் கடுமையாக அடித்து, துன்புறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி அவர் மீது தீ வைத்திருக்கிறார்.
இதில் பிரேமா அலறி துடித்தார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென்று அவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையை சார்ந்தவர்கள் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.