டெல்லி பகுதியில் உள்ள தென்மேற்கு பாலத்தில் தினேஷ் என்பவர் தனது மனைவி தர்ஷணா, மகன் கேசவ் மற்றும் மகள் ஊர்வஷி ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன் குர்கானில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் மகன் மது மற்றும் போதைக்கு அடிமையானவர் என்றும் அறியப்படுகிறது.
இந்த ஆண்டின் தீபாவளியில் வேலையை விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கே வந்து தங்கியுள்ளார். போதைக்கு அடிமையான மகனை குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். சில மாதங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் போதைப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். வீட்டில் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர் குடும்ப உறுப்பினர்களை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து அலறல் சத்தம் கேட்கவே வந்த அக்கம்பக்கதினர் வந்து பார்த்த போது அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் தப்பி செல்ல முயன்ற இளைஞரை காவல்துறையினர் பிடித்தனர்.