வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு….! ரவுடிக்கு ஏற்பட்ட பரிதாபம் காவல்துறையினர் அடுத்த அதிரடி நடவடிக்கை….!

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, போதை பொருளை கட்டுப்படுத்துகிறோம், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பல்வேறு தகவல்களை மாநில அரசு தெரிவித்து வருகிறது.


ஆனாலும் அது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல சம்பவங்களை உற்று நோக்கினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தபோது தவறுதலாக நாட்டு வழி என்று வெடித்ததில் ரவுடியின் கைகள் துண்டாகி போயினர் இது குறித்து சம்பந்தப்பட்ட ரவுடியும் அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டனர். சென்னை அடுத்துள்ள வண்டலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கார்த்திக் (29) இவர் மீது 30க்கும் அதிகமான குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வரும் தன்னுடைய நண்பனான விஜயகுமார்( 32) என்பவரின் வீட்டிற்கு சென்ற கார்த்திக் வீட்டின் மாடியில் பட்டாசு மருந்துகளை கொண்டு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்திருக்கிறார்.

அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கார்த்திக்கின் கைகள் முகம் உடல் உள்ளிட்ட பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டனர். உடனடியாக அவரை விஜயகுமார் மீட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கே மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கியும் கார்த்திக்கின் இரு கைகளும் துண்டாகி போயினர்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கார்த்திக்கின் நண்பரான விஜயகுமாரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அதன் பிறகு புழல் சிறையில் அடைத்தனர் ஆகவே கார்த்திக் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Next Post

உடலுக்கு கேடும் தரும் சமையல் பாத்திரங்கள்..!! இனி இதுல சமைத்து சாப்பிடாதீங்க..!!

Tue Feb 7 , 2023
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் சாலைகள் முதல் சமையலறை வரை நவீன விஷயங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள், தற்போது மின்னணு வாகனங்களாக மாற்றப்படுகின்றன. கேஸ் மற்றும் விறகு அடுப்புக்கு பதிலாக இண்டக்‌ஷன் ஸ்டவ் பயன்படுத்தப்படுகிறது. இந்த விஷயங்கள் நம் சூழலுக்கு நல்லது என்றாலும் நம் முன்னோர்களின் விஷயங்களை விட்டுவிட்டு அவர்களின் ஆரோக்கியத்தையும் பலவீனப்படுத்துகிறோம். அந்த வகையில், இன்று நாம் சமையலறையில் […]

You May Like