நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி நாட்டில் 3,758 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2025 ஜனவர் 1 முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 1400 பேர் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 199 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,336 வழக்குகள் உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளன.
தொற்றுகளின் தீவிரம் குறைவாக உள்ளது, பெரும்பாலான நோயாளிகள் வீட்டு பராமரிப்பில் உள்ளனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய COVID-19 பரவலுக்கு மத்தியில், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளுக்கு இது வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Read more: ரூ.30 கோடி லாட்டரி தொகையை காதலிக்கு தூக்கி கொடுத்த இளைஞன்.. பாய் பிரண்டுடன் எஸ்கேப்..!!