மும்பையில் 32 வயது பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியை அதிர வைத்த ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கைப் போன்ற மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள மீரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 32 வயது பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணை அவரது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி” அவற்றில் சிலவற்றை காட்டுப்பகுதியில் அப்புறப்படுத்தியுள்ளார்.
தற்பொழுது இந்த வழக்கில், மனோஜ் சஹானி என்ற 56 வயது மதிக்கத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்., கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை மீரா ரோடு பகுதியின் கீதா நகர் 7 ஆம் கட்டத்தில் உள்ள பிளாட் 704 இல் சரஸ்வதி வைத்யா என்பவருடன் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.