தமிழகத்தைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கும் ஆபரேஷன் 4.0 தேர்தல் வேட்டையை காவல்துறையினர் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் காலனி வழியாக சென்ற ஒரு வேனை சோதனை செய்தபோது அதில் குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மம்சாபுரம் பரமசிவம், நாடார் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற சேட்டன் (30) வடக்கு மலையடிபட்டி தெருவை சேர்ந்த பிரகாஷ் (23) இசக்கிமுத்து(24) உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையினர், வேன் மற்றும் 375 கிலோ குட்கா பொருட்கள் உள்ளிட்டோற்றை பறிமுதல் செய்துள்ளனர்.