Job: அரசு கலை கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் காலி பணியிடங்கள்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பம்…!

Tn Govt 2025

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு முதன்மையான தனித்துவமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். உலகளவில் அனைத்து துறைகளிலும் நமது மாணவர்கள் சிறந்து விளங்கவே இந்த சிறப்பான திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார். அதனை, நம் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி உலகளவில் சிறந்த திறன்மிக்கவர்களாக சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

2025-26ஆம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 08.10.2025 ஆகும். மேலும், 21.07.2025ஆம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பற்றி தெரியுமா..? தீராத நோய்களையும் தீர்க்கும்..!! கோயிலுக்கு போன இதை மறந்துறாதீங்க..!!

Thu Sep 25 , 2025
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சுமார் […]
Murugan 2025 1

You May Like