தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது.
அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார்.
மேலும் கீதாவுக்கு அறிவுரையும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக ராஜசேகருக்கும்,மகள் கீதாவுக்கும் இருவருக்கிடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக பலராலும் பேசப்பட்டு வந்தது நிலையில் தந்தை ராஜசேகரும் , காதல் விவகாரம் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.
சந்தேகமடைந்த ராஜசேகர் சம்பவத்தினத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மகளை கோடாரியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இத்தகவல் அறிந்த போலீசார் தந்தை ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் ராஜசேகரின் மீது ஐபிசி பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.