பேஸ்புக் பழக்கம்.. வீட்டிற்கு வந்து இளைஞரின் விபரீத செயலால் அதிர்ந்து போன குடும்பம்.!

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் கவுதம் இருவரும் வசித்து வருகின்றனர். இளைஞர் கவுதமுக்கு 2016ம் வருடம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது.


இந்த சூழ்நிலையில், திடீரென்று அந்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கவுதமிடம் கூறியுள்ளார். அந்த பெண் கூறியதில் கோபமடைந்த கவுதம் தன்னை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து கவுதம் சொன்னதை அந்த பெண் கேட்காமல் இருந்ததால் தனது பொறுமை இழந்து, இளம் பெண்ணின் வீட்டிற்கே நேரில் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை மிரட்டி இருக்கின்றார்.இதனை கண்டு இளம்பெண்ணின் குடும்பத்தார் கவுதம் மீது புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த இளைஞர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கவுதமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

1newsnationuser5

Next Post

தவறான ஊசி போட்டதால், உயிரிழந்த 5 வயது சிறுவன்.!

Tue Nov 8 , 2022
விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி எனும் கிராமம். அந்த பகுதியில் மகேஸ்வரன் மற்றும் மகன் கவிதேவநாதன் (6) வசித்து வந்துள்ளனர். சிறுவனுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டதால் அரசு டாக்டர் பாஸ்கரனின் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்த போது ,ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் […]
injectionvaccinemedicalhospitaldoctor 770x433 1

You May Like