திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் காங்கரனந்தல் கிராமத்தில் சேர்ந்த ஜெயசுதா (27) வசித்து வருகிறார். சென்ற 2017ம் ஆண்டில் சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வரும் நிலையில், அதே மருத்துவமனையில் குணசேகரன் என்பவருக்கும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தவருடன் காதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்ற 2018ம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜெயசுதா கருவுற்று குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளன. இதனையடுத்து தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே உறவினர் மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறி விட்டது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே நதியா என்ற மனைவியும் தீட்னாஸ்ரீ என்ற மகளும் உள்ளார்.
மாணிக்கம் தனது குடும்பத்தை மொத்தமாக கைகழுவி விட்டு கள்ளகாதலியான ஜெயசுதா மற்றும் ஜெயசுதாவின் குழந்தையை சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்துள்ளார்.
சென்ற மாதம் 21ந் தேதி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு கள்ளகாதலி ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜ் கட்டையால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.