என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் பாகற்காயினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சர்க்கரையின் அளவு குறைகிறது. அத்துடன் உட்கொள்ளும் மருந்துகளை பொருத்து மாற்றம் பெறும் என்பதால் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.