பல கோவில்களில் செல்போனில் படம் எடுப்பதை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல கூடாது என்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை என்றும் அரசு தெறிவித்துள்ளது.
நாம் எடுத்துச் செல்லும் செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் பின்னர் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து அவரவர் செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் இவ்வாறு செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணமாக கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் தடையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.