வெறும் 400 ரூபாய் பாக்கிக்காக கட்டிட தொழிலாளி கொடூர கொலை!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக சீனிவாஸ் வழங்கி உள்ளார். நேற்று காலை நர்சபூர் நடைபாதையில் ஸ்ரீநிவாஸ் மற்றும் காசிராம் உள்ளிட்டோரிடையே மீதம் கொடுக்க வேண்டிய 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த அந்த பகுதியை சார்ந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இருந்தாலும் கோபம் குறையாத காசிராம் காலை 10 மணி அளவில் சீனிவாசை சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் மீது தள்ளிவிட்டு இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீநிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலைதான்..!! உடலில் காயங்கள்..!! உடற்கூராய்வில் அதிர்ச்சி..!! வெளிவந்த உண்மை..!!

Mon Dec 26 , 2022
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. அவர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது புரியாத புதிராகவே உள்ளது. சுஷாந்தின் மரணம் தொடர்பாக விசாரணை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தற்போது அவரது மரணம் குறித்து […]
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலைதான்..!! உடலில் காயங்கள்..!! உடற்கூராய்வில் அதிர்ச்சி..!! வெளிவந்த உண்மை..!!

You May Like