சோகம்…! கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…! விசாரணை தீவிரம்…!

கேரளாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் அருகே உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானத்தின் போது கெட்டுப்போன உணவை அருந்திய 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டார்.


இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உணவு வழங்கிய கேட்டரிங் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதமுள்ளவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

அட கொடுமையே...!விளையாட்டு துறை அமைச்சர் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்...!

Mon Jan 2 , 2023
விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹரியானாவில் விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் தான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் . எனது இமேஜை கெடுக்க முயற்சி […]
images 2023 01 02T061605.542

You May Like