#விருதுநகர்: வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மனைவியின் கள்ளக்காதல் அம்பலம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வானந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பட்டாசு அலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.


ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று இரவு பாண்டி செல்வம் வெளியில் சென்றபோது, ​​பணி நிமித்தமாக வெகுதூரம் சென்றுவிட்டதாக நினைத்து கருப்பசாமிக்கு போன் செய்துள்ளார் ரூபா.  அவர் வந்ததும் இருவரும் படுக்கையில் படுத்திருந்தனர்.

அப்போது வெளியே சென்றிருந்த பாண்டி செல்வம் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். மற்றொரு வாலிபர் தன் கண் முன்னே மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த பாண்டி செல்வம், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து படுத்திருந்த கருப்பசாமியை சரமாரியாக அடித்தார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த பாண்டி செல்வம் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி செல்வத்தை தேடி வருகின்றனர். பாண்டி செல்வம் தன்னை போலீசார் தேடி வருவதும் தெரிந்து தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். 

1newsnationuser5

Next Post

கோவிலின் கருவறையில் பெண்ணிற்கு நடந்த அவலம்..!

Sat Jan 7 , 2023
கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு அருகே உள்ள அமிர்தலியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, ​​கோவிலுக்குள் பூஜை செய்து கொண்டிருந்த பெண்ணிடம், ‘நீ கறுப்பாக இருக்கிறாய், குளித்த மாதிரி தெரியவில்லை’ என்று கூறி கோவில் அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டினார்.  அந்த பெண் பார்ப்பதற்கு வினோதமாக இருப்பதால் சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என்றும் கூறி தாக்கியுள்ளார். […]
Screenshot 2023 01 07 10 50 17 51 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like