பகலில் பதுங்கல்.. இரவில் வேட்டை.. பிரபல ரவுடியை பிடித்த போலிஸ் தீவிர விசாரணை.!

கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு டீ குடிக்க சென்ற முகமது அர்ஷத் என்ற இளைஞரை தாக்கி ஒரு கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. மேலும், அண்ணா நகர் பகுதியில் எட்டு பேர் கொண்ட கும்பல் இதே போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களின் சிசிடிவிக்களையும் ஆய்வு செய்த போலீசார் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என உறுதி செய்தனர்.


இந்த சம்பவங்கள் தொடர்பாக சென்னை போரூர் காந்திநகர் செட்டியார் அகரம் பகுதியைச் சார்ந்த பிரபல ரவுடி இளங்கோ மற்றும் அவரது கும்பல்கள் தான் இச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகித்த போலீசார் அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். அண்ணா நகர் சம்பவத்தில் தினேஷ் என்கிற பாவாடை தினேஷ் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் திருவல்லிக்கேணி சம்பவத்திலும் இருவர் கைது செய்யப்பட்டனர் . ஆனால், முக்கிய குற்றவாளியான இளங்கோ மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பிவிட்டனர்.

இதனை அடுத்து தனிப்படை அமைத்து பிரபல ரவுடி இளங்கோவை தீவிரமாக தேடி வந்தனர் போலீசார். இந்நிலையில் இளங்கோவை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை அவரது வீடு புகுந்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்ரீதர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் இளங்கோ மீது கொலை முயற்சி உட்பட ஐந்து வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. அப்போதே இளங்கோ தப்பிவிட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கெம்மராஜபுரம் கிராமத்தில் மூன்று இளைஞர்களை கொன்று ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் தொடர்பாக ரவுடி இளங்கோ மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து இளங்கோ நீதிமன்ற பினையில் வந்து மீண்டும் ஸ்ரீதரைக் கொல்ல திட்டமிட்டு இருக்கிறார். அந்த சமயம் ஸ்ரீதர் அவரது வீட்டில் இல்லாததால் ஆத்திரமடைந்தவர்கள் அண்ணா நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பொதுவாக தலைமறைவாக இருந்த இளங்கோ இரவு நேரங்களில் மட்டும் ரவுடிசம், வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளங்கோவிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

2-வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Sun Jan 29 , 2023
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, வனக்காப்பாளராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். பணியிலிருந்தபோது, செய்த தவறுக்காக தண்டிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இவரின் முதல் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனிமையில் இருந்து […]
2-வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like