பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27) திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரி (50) என்ற நபர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், உபேந்திரதாரி அவர்களின் மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவற்கு முறை தவறிய உறவு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரிப்பதற்காக உபேந்திராதாரி பவன் யாதவ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் கொண்ட உபேந்திராதாரி அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை கை, தலை போன்ற பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த பவன் யாதவை அருகில் இருந்தவர்கள் வீட்டு அவசர உறுதியின் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவர் திடீரென்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பவன் யாதவ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரியை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்