தனது மகனைகொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அஸ்ஸாம் சென்று ராணுவ அதிகாரியை பார்க்கச் சென்ற தமிழ் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டம் சங்கசாரி என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக உடலை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். காவல்துறையின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் தமிழகத்தைச் சார்ந்த வந்தனா ஸ்ரீ என தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் இந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது தொடர்பாக தீவிரமான விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில் ராணுவ அதிகாரி ஒருவர் தான் வந்தனாஸ்ரீ யின் கொலைக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அமரீந்தர் சிங் வாலியா என்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். லெப்டினன் கர்ணலாக இராணுவத்தில் பணியாற்றும் இவர் அசாம் மாநிலத்தின் தேஜ்பூரில் ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அந்த ராணுவ அதிகாரிக்கும் வந்தனாஸ்ரீக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அம்ரீந்தர் சிங்கை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து அசாம் வந்திருக்கிறார் வந்தனா ஸ்ரீ. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையில் அம்ரீந்தர் சிங் வாலியா வந்தனாஸ்ரீ கொலை செய்ததை காவல்துறையிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் வந்தனா ஸ்ரீ தனது நாலு வயது மகனை கொல்கத்தாவில் உள்ள ஹௌரா ரயில் நிலையத்தில் விட்டு வந்தது காவல்துறை விசாரணையில் தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்து அந்த சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ராணுவ அதிகாரியே பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.