திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருக்கின்ற பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாட்டாக சிறு, சிறு கற்களை வீசியதை குறித்து தோளூர் பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோபி என்பவரின் மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்திருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் அந்த மாணவரை தாக்கி இருக்கிறார்கள். இதில் காயமடைந்த மவுலீஸ்வரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மவளே சரணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
அதன் பின்னர் இது குறித்து 3 மாணவர்களையும் தொட்டியம் காவல்துறையினர் கைது செய்து திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதோடு, பணியில் அலட்சியமாக இருந்ததாக தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், மற்றொரு ஆசிரியை வனிதா உள்ளிட்ட மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது பள்ளிக்கல்வித்துறை. மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர் மவுலீஸ்வரனின் சொந்த ஊரான தோளூர்பட்டியில் இறுதி சடங்குகள் நடந்தனர் இதில் முசிறி சட்டசபை உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்று மாணவரின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இந்த துயர சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.