நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்..

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது..

இன்று காலை 137 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் வாரணாசிக்கு புறப்பட்டது.. ஆனால் சிறிது நேரத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் தெலங்கானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எனினும் 137 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து பல பயணிகள் விமானங்கள் கடந்த சில நாட்களாக திருப்பி விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது…

RUPA

Next Post

தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு….! தமிழக அரசு விதித்த அதிரடி உத்தரவு…..!

Tue Apr 4 , 2023
தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், சுகாதாரதுறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆகவே தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்றுப் பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் வக்கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி 100% முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று […]
omicorn corona

You May Like