பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது..
இன்று காலை 137 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் வாரணாசிக்கு புறப்பட்டது.. ஆனால் சிறிது நேரத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் தெலங்கானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எனினும் 137 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து பல பயணிகள் விமானங்கள் கடந்த சில நாட்களாக திருப்பி விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது…