வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக போலியான வதந்தியை பரப்பிய நபர்…..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அதிரடி கைது…..!

தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள், அதேபோல வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று போலியான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கினர், இந்த நிலையில், அப்படி வதந்திகளை பரப்பிய நபர்கள் யார் என்று காவல்துறை மிக தீவிரமாக தேடி வந்தது. அதோடு பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு இருந்தனர்.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் வட இந்தியர்கள் மீது தாக்கமும் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 30 போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக யூடியூபர் மனிஷ் காசியப் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது அதோடு தமிழக காவல்துறையினர் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது 15 வழக்குகள் பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய நிலையில், அவர் காவல்துறையினரால் பேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Post

ஸ்டார்ட் அப் இந்தியா...! மொத்தம் 92,683 நிறுவனங்களை அங்கீகரித்த மத்திய அரசு...!

Thu Apr 6 , 2023
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்டார்ட் அப் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவுமான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான துறை, அங்கீகரிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் […]

You May Like